search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்ச்சி விகிதம்"

    • கலெக்டர் ஆசிரியர்களுக்கு அறிவுரை
    • பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளை மேம்படுத்துவது மற்றும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை முன்னேற்றத்திற்கான ஒரு மைல் கல்லை எய்திட முழு மனதுடன் கல்வி கற்பிக்க வேண்டும். மாணவர்கள் பலதரப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளை கொண்ட குடும்பங்களில் இருந்து கல்வி கற்க பள்ளிகளுக்கு வருகின்றனர்.

    அவர்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். இதில் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். மேலும் ஆசிரியர்கள் தாங்கள் பணி புரியும் பள்ளியை என்னுடைய பள்ளி, எங்களுடைய கல்வி நிறுவனம் என்று பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய பள்ளியின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் தனியார் பள்ளிகள் எவ்வாறு செய்கின்றனரோ அதே போன்று சிறிது கவனம் செலுத்தி தூய்மையுடன் வைத்துக்கொள்ள உறுதி ஏற்க வேண்டும்.

    தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள போட்டி, பொறாமைகள் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.

    ஆசிரியர்கள் இனிவரும் காலங்களில் தாங்கள் பணிபுரியும் பள்ளியினை என்னுடைய பள்ளி என்ற மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும்.

    என்பது உள்பட பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

    திருப்பத்தூர்:

    திதிருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவ ராக இருந்த மதன் குமார் தஞ்சாவூருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் காஞ்சீபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) முனி சுப்ராயன், பதவி உயர்வில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

    அவர் திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். அவருக்கு அலுவலக ஊழியர்கள், ஆசிரியர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

    அதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர் முனி சுப்ராயன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத் தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தேவை யான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    காலியாக உள்ள ஆசிரிய பணியிடங்களை நிரப்புதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பத்தூர் மாவட் டத்தை கல்வியில் முதன்ை மாவட்டமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் முருகன் பேட்டி
    • தேர்ச்சி விழுக்காடை அடுத்த கல்வியாண்டில் மேலும் அதிகரிக்க நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த புகழேந்தி, திருவாரூர் மாவட்டத்திற்கு மாற்றப் பட்டார். இதையடுத்து புதிய முதன்மை கல்வி அதிகாரி யாக சேலம் மாவட்ட கல்வி அதிகாரி முருகன் நியமனம் செய்யப்பட்டார்.

    அவர் இன்று நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தொடக்க கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விழுக்காடு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் முதன்மை கல்வி அலுவலர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 97.05 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விழுக்காடை அடுத்த கல்வியாண்டில் மேலும் அதிகரிக்க நட வடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் எந்தெந்த பள்ளிகள் எவ்வளவு தேர்ச்சி பெற்றுள்ளது, தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க பள்ளிகளில் இன்னும் என்னென்ன நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் விழுப்புரம் மாவட்டத்தில் 92.08 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் மாவட்ட த்தில் அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் 189 உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 20,972 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவற்றில் மாணவர்கள் 10,263 பேர், மாணவிகள் 10,709 பேர் தேர்வு எழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,114 பேரும், மாணவிகள் 10,197 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதும் 92.08 சதவீதம் தேர்ச்சி விகிதமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அரசு பள்ளி களில் 90.23 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோட்டக்குப்பம், வீடூர் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 92.82 சதவீதம் தேர்ச்சி. அடைந்துள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடலூர் மாவட்டத்தில் 29,934 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,718 பேரும், மாணவிகள் 15,216 பேர் அடங்குவர். இன்று வெளியான தேர்வு முடிவில் 27,784 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 13,275 பேரும், மாணவிகள் 14,509 பேரும் தேர்வாகி உள்ளனர். தேர்ச்சி விகிதம் 92.82 சதவீதமாகும்.

    கடலூர் மாவட்டத்தில் 108 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 12,765 பேர் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவில் 11,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 88.72 சதவீதமாகும்.

    • தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது
    • இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்டத்தில் 12984 மாணவர்களும், 12574 மாணவிகளும் என மொத்தம் 25558 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    இதில் 9584 மாணவர்களும், 11183 மாணவிகளும் என மொத்தம் 20767 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 73.81 சதவீதம் ஆகும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் 9981 மாணவர்களும், 10669 மாணவிகளும் என ெமாத்தம் 20650 பேர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    இதில் 8509 மாணவர்களும், 10076 மாணவிகளும் என ெமாத்தம் 18585 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதம் ஆகும்.

    ×